வீட்டின் மேற்கூரை இடிந்து விழுவதால் அச்சத்தில் பொதுமக்கள்

மானாமதுரை அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுவதால் அங்கு வாழும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்

Update: 2024-09-01 09:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே விளத்துார் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் குடியிருப்பில் 1986ம் ஆண்டு 25 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். வீடுகள் கட்டப்பட்டு 36 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் அனைத்து வீடுகளிலும் சிமென்ட் பூச்சு ஆங்காங்கே உதிர்ந்து கீழே விழுகின்றன. இந்த வீடுகளுக்கு இதுவரை பட்டா கொடுக்கப்படவில்லை. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு மக்களின் நலன் கருதி விரைவில் வீட்டுமனை பட்டாவோடு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News