சாலையில் சீறிப்பாய்ந்த காளைகள் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்

திருப்பத்தூர் கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டியில் எல்கை பந்தயம் நடைபெற்றது.

Update: 2024-09-02 00:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தென்மாபட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. மானாமதுரை - பெரம்பலூா் நெடுஞ்சாலையில் நடைபெற்ற போட்டியில் திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரிய மாடு பிரிவில் 12 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 35 ஜோடிகள் என மொத்தம் 47 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இறுதியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. திருப்பத்தூர் சிவகங்கை காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பார்வையாளர்கள் சாலையின் இருபுறமும் நின்று சீறி பாய்ந்த காளைகளை கண்டு களித்தனர்

Similar News