ஆசிரியர் தினவிழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

Update: 2024-09-06 02:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி இலக்கிய மன்ற வளாகத்தில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில், அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். பின்னர் அப்பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார். விழாவில், திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News