சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே தொடர் திருட்டு அச்சத்தில் பொதுமக்கள்

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி தொடர் திருட்டு அச்சத்தில் பொதுமக்கள்

Update: 2024-09-06 09:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இரண்டு பைக்குகளை திருடிச்சென்ற கொள்ளையர்கள். தொட்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாப்பண்ணா என்பவர் கடந்த 03.09.2024 அன்று தாளவாடி அருகே அண்ணா நகர் பெட்ரோல் பங்க் பின்புறம் அக்கா வீட்டில் பல்சர் வாகனத்தை நிறுத்தியிருந்த நிலையில் நேற்று வாகனம் திருடு போனது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பாப்பண்ணா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பின்புறமுள்ள அம்பேத்கர் வீதியை சேர்ந்த மல்லேஷ் என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனமும் திருடு போனதால் அதிர்ச்சியடைந்த மல்லேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருவரது புகாரையும் ஏற்ற தாளவாடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News