சுயமரியாதை திருமணம்

சுயமரியாதை திருமணம் நடத்தி வைத்த அமைச்சர் கே.என்.நேரு

Update: 2024-09-13 06:35 GMT

சுயமரியாதை திருமணம் நடத்தி வைத்த  அமைச்சர் கே.என்.நேரு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் ஒன்றிய திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.ராஜேந்திரன். ஒன்றிய துணை பெருந்தலைவர் சித்ரா ராஜேந்திரன் அவர்களின் இல்லத் திருமணம் ஆகஸ்ட் 8ம் தேதி திருச்சி கலைஞர் அரங்கில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் திருக்கரங்களால் தாலி எடுத்து கொடுத்து சுயமரியாதை திருமணமாக நடத்தி வைத்து சிறப்புரையாற்றினார்.



அத்திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று 12.09.2024 இரவு மாமல்லபுரம் கான்புலன்ஸ் ஹாலில் நடைபெற்றது இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர்.MLA, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ப.அப்துல்மாலிக், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளர், ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.இரங்கநாதன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் எம்.பி.கதிரவன் மற்றும் மாவட்ட, மாநில, ஒன்றிய, நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உறவினர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




 


Tags:    

Similar News