மதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா

பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Update: 2024-09-15 12:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்லடம் கரைப்புதூர் உப்புலிபாளையத்தில் மதிமுக சார்பில் கொடியேற்றும் விழா மற்றும் அன்னதான விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் கொங்கு ராஜேந்திரன் கலந்துகொண்டார்.இந்த நிகழ்ச்சியில் மதிமுகவின் மாவட்டச் செயலாளர் புத்திரச்சல் மணி,மாவட்ட பொருளாளர் ஒன்றிய கவுன்சிலர் R R .ரவி,ஒன்றிய செயலாளர் மு. சுப்ரமணியம்,மாவட்ட இளைஞரணி செயலாளர் K S தமிழ்ச்செல்வன் மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News