திண்டுக்கல் கோட்டைகுளத்தில் அடையாளம் தெரியாத 32 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் - கொலையா
திண்டுக்கல்;
திண்டுக்கல் கோட்டைகுளத்தில் 32 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்து கொண்டிருந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நீரில் மிதந்து கொண்டிருந்த வாலிபரின் உடலை மீட்டனர் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், கொலையா? விபத்தா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்