பைக்-கார் மோதல் வாலிபர் பலி!

விபத்து செய்திகள்

Update: 2024-09-15 14:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆலங்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராம்குமார் வயது(21). நேற்று முன்தினம் இரவு இவர் தனது பைக்கில் வம்பன் நால்ரோடு அருகே சென்று கொண்டி ருந்துள்ளார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி நோக்கி வந்த கார் பைக்கின்மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராம்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராம்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஆலங் குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் கே.வி.கோட்டையை சேர்ந்த ரமேஷ் (41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News