ஒன்றிய பொது நிதி தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

ஒன்றிய பொது நிதி தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

Update: 2024-09-16 13:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு ஒன்றியம் வட்டூர் ஊராட்சி வேலனம்பட்டியில், மூணாம் பள்ளி காடு முதல் வெள்ளப்பெருமாள் கோவில் வரை, ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை போடப்பட்டது. நிகழ்வில் திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் சுஜாதா தங்கவேல், திமுக ஒன்றிய கழக செயலாளர் வட்டூர் தங்கவேல், மல்லசமுத்திரம் ஒன்றிய கழக செயலாளர் பழனிவேல், முன்னாள் கவுன்சிலர் ராமசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தங்கவேல், பிரபு, வெங்கடாஜலம், சேகர், தேவராஜ், சரவணன் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News