பருவநிலை மாறுபாட்டால் செத்து மிதந்த மீன்கள்

பருவநிலை மாறுபாட்டால் செத்து மிதந்த மீன்கள்

Update: 2024-09-19 08:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு ஈரோடு ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் பருவநிலை மாறுபாட்டால் திடீரென ஏற்பட்ட வெப்பத்தால் தண்ணீர் சூடானதை தொடர்ந்து குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்க தொடங்கி துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு சம்பவ இடத்தை பார்வையிட்டு தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.ஆய்வின் போது நகராட்சி துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் நகர்மன்ற உறுப்பினர்கள் திவ்யா வெங்கடேஸ்வரன், ரமேஷ், ரவிக்குமார், சண்முகவடிவு, தாமரைச்செல்வி மணிகண்டன், மனோன்மணி சரவணமுருகன், உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

Similar News