நில தகராறில் விவசாயி அடித்து கொலை!

குற்றச் செய்திகள்

Update: 2024-09-24 10:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். கந்தர்வகோட்டை ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சி சொக்கம்பேட்டை கிராமத்தில் வசிக்கும் இடும்பையன் மகன் அருணாசலம் (60). இவர், விவசாயியாகவும் மைக் செட் அமைப்பாளராகவும் இருந்துவந்தார். இவருக்கும், இதே ஊரை சேர்ந்த சண்முகம் மகன் முத்துவேல் (32) என்பவருக்கும் நிலத்தில் நீர் பாய்ச்சுவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதில் கடந்த 18-ஆம் தேதி அருணாசலத்தை முத்துவேல் நிலத்தில் வைத்துதாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அருணாசலத்தை உறவினர்கள் கந்தர்வகோட்டை மருந்துவமனையில் அனுமதித்தனர்.அங்கிருந்து மேல் சிகிச்சை பெற தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த அருணாச்சலம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Similar News