வேடிச்சிப்பாளையத்தில் குடும்பத்தகராறில் மனைவியை திட்டிய கணவன். தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி.

வேடிச்சிப்பாளையத்தில் குடும்பத்தகராறில் மனைவியை திட்டிய கணவன். தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி.

Update: 2024-09-25 16:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வேடிச்சிப்பாளையத்தில் குடும்பத்தகராறில் மனைவியை திட்டிய கணவன். தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி. கரூர் மாவட்டம், நெரூர் தெற்கு அருகே உள்ள வேடிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன பெரியசாமி மனைவி உத்தரகுமாரி வயது 30- கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் செப்டம்பர் 23 ஆம் தேதி இரவு அலைபேசியில் தனது மனைவியிடம் நெடுநேரம் பேசிய மோகன பெரியசாமி, மனைவியை திட்டி உள்ளார். இதனால் விரக்தி அடைந்த உத்தரகுமாரி செப்டம்பர் 24ஆம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த மோகன பெரியசாமி அதிர்ச்சி அடைந்ததோடு, இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த உத்தரகுமாரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.

Similar News