வேலுசாமிபுரத்தில் மது போதைக்கு அடிமையான வாலிபர் உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்பு.

வேலுசாமிபுரத்தில் மது போதைக்கு அடிமையான வாலிபர் உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்பு.

Update: 2024-09-28 12:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வேலுசாமிபுரத்தில் மது போதைக்கு அடிமையான வாலிபர் உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்பு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எல் என் எஸ் போஸ்ட், வேலுசாமிபுரம் ஃபர்ஸ்ட் கிராஸ் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சபரிநாதன் வயது 33.இவர் அப்பகுதியில் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். கடந்த பல வருடங்களாக மது போதைக்கு அடிமையாக இருந்த இவர் திருமணமும் செய்து கொள்ளவில்லை. அதிகமாக மது அருந்தியதன் விளைவாக, கடந்த ஒரு வருடமாக கல்லீரல் மற்றும் கணையம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆயினும் குணமாகவில்லை. இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி காலை 6:15 மணியளவில், வேலுச்சாமிபுரம் பஸ்ட் கிராஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே உடல் சிதைந்த நிலையில் சடலமாக கிடந்ததை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து, தாந்தோணி மலை பகுதியில் வசித்து வரும் சபரிநாதன் சகோதரி பத்மப்பிரியாவுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த பத்மபிரியா தனது சகோதரன் உயிரிழந்த நிலையில் இருப்பதை பார்த்து அது தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிதைந்த நிலையில் இருந்த சபரிநாதன் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News