திருப்பூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகறாரால் ஒருவர் குத்தி கொலை!

திருப்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறு ஒருவர் குத்தி கொலை. இளைஞர் கைது!

Update: 2024-09-30 10:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மது போதையில் ஏற்பட்ட தகராறு ஒருவர் குத்தி கொலை இளைஞர் கைது. திருப்பூர் முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜா (37) இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் வசந்தகுமார் 19 என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக இருவரும் ஒன்றாக மது அருந்தி வந்துள்ளனர். நேற்று இரவு இரண்டு பேரும் தனியாக அமர்ந்து மது அருந்திய போது வசந்தகுமாரின் தாய் குறித்து அழகுராஜா தவறாக பேசியதாக கூறப்படுகிறது இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் எனினும் ஆத்திரம் குறையாத வசந்தகுமார் என்று அதிகாலை தனது வீட்டில் இருந்து கத்தியுடன் சென்று அழகுராஜாவின் வீட்டில் வைத்து அவரை ஒன்பது இடங்களில் குத்தி கொலை செய்தார். சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அழகுராஜாவை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் சென்ற நிலையில் அழகுராஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் வசந்தகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். **

Similar News