ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்..

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்..

Update: 2024-10-02 13:44 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம் அதன்படி. அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் க்கு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால் ,தயிர் ,மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் வெள்ளி காப்பு அலங்காரம் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Similar News