காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-10-02 15:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் ஜானகிராமன் தலைமையில், கட்சி அலுவலகம் முன்பு காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, அங்குள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மகாத்மா காந்தி சமூக சேவை மையம் சார்பில் நடந்த காந்தி பிறந்த நாள் விழாவில், தலைவர் காந்தி நாச்சிமுத்து, வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி முதல்வர் செல்வி தலைமை வகித்தனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பேச்சு, கட்டுரை, ஓவியம், விநாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் முனிராஜா கல்வி நிறுவன தாளாளர் ஜெயபிரகாஷ், எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பாலமுருகன், சேலம், தொழிலதிபர் தங்கராஜ் பெரியசாமி, ரோட்டரி சங்க தலைவர் சண்முகம், நகராட்சி கவுன்சிலர் பழனிச்சாமி, மகளிர் குழு செயலர் விஜயலட்சுமி, தொழிலதிபர்கள் பழனிச்சாமி, பெருமாள் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் அய்யா சாமி, கவுரி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை விஜயசாமுண்டேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர். விடியல் ஆரம்பம் சார்பில் வீ. மேட்டூர் பகுதியில் காந்தி பிறந்த நாள் விழா அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பேச்சு, கட்டுரை, ஓவியம், விநாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் தீனா, நவநீதன், ரூபேஷ், பிரசாந்த், தங்கமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News