தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு பரிசு

நகர் மன்ற தலைவர் வழங்கினார்

Update: 2024-10-02 18:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விருத்தாசலம் நகராட்சியில் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதியிலிருந்து நேற்று அக்டோபர் இரண்டாம் தேதி வரை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விருத்தாசலம் நகராட்சியில் பல்வேறு முகாம்கள் நடந்து வந்தது. இந்த முகாம்களில் சிறப்பாக பணிபுரிந்த 6 துப்புரவு பணியாளர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் சுகாதார அலுவலர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், மேற்பார்வையாளர்கள் ஆறுமுகம், முத்தமிழ் செல்வன், வேல்முருகன், களப்பணி உதவியாளர் செங்குட்டுவன், மற்றும் தூய்மை இந்தியா திட்டப் பணிகள் பரப்புரையாளர்கள், களப்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News