டெங்கு விழிப்புணர்வு நூதன பிரச்சாரம்

டெங்கு விழிப்புணர்வு நூதன பிரச்சாரம்

Update: 2024-10-04 10:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு நகராட்சி பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் பட்டறை மேடு பகுதிகளில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தண்டோரா அறிவிப்பு மூலம் அப்பகுதி மக்களுக்கு சென்றடையும் வகையில் துவக்கி வைக்கப்பட்டது. நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். பட்டறை மேடு பகுதிகளில் வாகனங்களின் டயர்களில் மழைநீர் புகுந்து டெங்கு புழுக்கள் உற்பத்தி ஆகாமல் பாதுகாத்து விட வேண்டும் தினசரி உருவாக்கும் குப்பைகளை தரம் பிரித்து நகராட்சி பணியாளர்களிடம் வழங்க வேண்டும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து தேவையற்ற பொருட்களை அகற்றி டெங்கு கொசு புழுக்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தண்டோரா அறிவிப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி உலகநாதன் மாதேஸ்வரன், தினேஷ்குமார், செல்வி ராஜவேல் தாமரைச்செல்வி மணிகண்டன், திவ்யா வெங்கடேஸ்வரன், மற்றும் நகராட்சி அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Similar News