தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற பெண் உட்பட மூன்று பேர் கைது

Update: 2024-10-05 06:45 GMT

தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற பெண் உட்பட மூன்று பேர் கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காஞ்சிபுரம் அருகே அய்யன் பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண் உட்பட மூன்று பேர் கைது. சிறையில் அடைப்பு.

காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நடவடிக்கை.




 தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில்,தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு கடைகளிலும் வியாபார நிறுவனங்களிலும் திடீர் சோதனையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் அடுத்த அய்யன்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் அய்யன்பேட்டை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அய்யன் பேட்டை பஜார் வீதியில் உள்ள கடைகளில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

போலீசாரின் திடீர் சோதனையில் பழைய சீவரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் ராஜ், அரவிந்தராஜ், நடத்தி வரும் கடையில் 84 கிலோ எடை கொண்ட 11,587 பக்கெட்களை பறிமுதல் செய்தனர்.

கருக்கு பேட்டை பகுதியில் செல்வி என்பவர் நடத்தி வரும் கடையில் 200 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் மூன்று பேரையும் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்து வாலாஜாபாத் போலீசில் ஒப்படைத்து மேல் நடவடிக்கை பரிந்துரை செய்தனர். இதனைத் தொடர்ந்து சங்கர் ராஜ், அரவிந்தராஜ், செல்வி,ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த வாலாஜாபாத் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News