குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

Update: 2024-10-05 08:07 GMT

குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அம்மையார் குப்பத்திலிருந்து செதிலூர் செல்லும் சாலை மற்றும் அம்மையார் குப்பம் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை சேதம் :

வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி : சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.




 


திருவள்ளூர் மாவட்டம் அடுத்த ஆர்.கே. பேட்டை அம்மையார்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட செதிலூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் செல்லும்போது அடிக்கடி தவறி விழுந்து அடிபடும் நிலை உள்ளது.

அம்மையார்குப்பம், மற்றும் அம்மையார் குப்பம் சுடுகாட்டுக்கு செல்லும் பிரதான சாலை ராஜா நகரம், செதிலூர், காண்டாபுரம், ஆர்.கே.பேட்டை,போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்கள் வாங்கவோ, மருத்துவமனைக்கு செல்பவர்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டி இருப்பதால் குண்டும் குழியுமாக ஜல்லிக்கற்கள்பெயர்ந்த நிலையில் இருக்கும் இரண்டு கிலோமீட்டர் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News