மடத்துக்குளம் அருகே அரிய வகை தேவாங்கை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்

கடத்தூர்

Update: 2024-10-06 15:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த கடத்தூர் பகுதியில் சிறிய குரங்கு போன்ற அமைப்பு கொண்ட விலங்கு ஒன்று நடக்க முடியாமல் மரத்திலிருந்து கீழே விழுந்து செல்வதை அங்குள்ள இளைஞர்கள் பார்த்துள்ளார்கள். உடனடியாக கடத்தூரை சேர்ந்த இளைஞர்கள் அரவிந்த் ,திவாகர், வசந்த், கோகுல் ஆகியோர் பத்திரமாக மீட்டு அதனை புகைப்படம் எடுத்து வனத்துறையினருக்கு அனுப்பவே அது அரிய வகை தேவாங்கு என்பது தெரிய வந்துள்ளது. லாபகமாக இரும்பு கூண்டு ஒன்று வைத்து தேவாங்கு அதன் உள்ளே சென்றபின் அடைத்து பின்னர் காட்டன் பாக்ஸ் ஒன்றில் மாற்றி கொழுமம் வனச்சராக வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்துள்ளனர்.

Similar News