பல்லடம் தனியாருக்கு சொந்தமான கேளிக்கை விடுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளைஞர் கொலை.

தலையில் கல்லை போட்டு நசுக்கி கொடூரம்-சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை.

Update: 2024-10-07 05:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தனியாருக்கு சொந்தமான திருப்பூர் ரிலாக்ஸ் ஸ்போர்ட்ஸ் அண்ட் சோசியல் வெல்ஃபேர் கிளப் என்ற கேளிக்கை விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு கூடுதலாக மதுபான பார் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு மது அருந்த வந்த வட மாநில இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு சரளமாக கிடந்தார். இன்று காலை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியோடு கொலை செய்யப்பட்ட நபர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்ட நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின் செய்தியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பார் வளாகத்தில் கொலை நடந்ததா அல்லது கொலை செய்யப்பட்ட நபரின் உடல் வெளியே வீசப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கேளிக்கை விடுதியில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டுமே மது அருந்த அனுமதிக்கப்படும் நிலையில் கொலை செய்யப்பட்ட வட மாநில இளைஞர் இந்த கேளிக்கை விடுதியில் உறுப்பினராக உள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News