திருப்பூர் ராயபுரம் பகுதியில் ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம்!

திருப்பூர் ராயபுரம் பகுதியில் ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-10-08 11:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் ராயபுரம் பகுதியில் அஇஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்! தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வை கண்டித்தும் திமுக அரசு வரியை உயர்த்தி உள்ளதை கண்டித்தும் அஇஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருப்பூர்,ராயபுரம் பகுதியில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில்  மாநில அம்மா பேரவை இணை செயலாளர்,முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் தலைமையில்,ராயபுரம் பகுதி செயலாளர் கேசவன் முன்னிலையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.மேலும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ராயபுரம் பகுதி கழக துணை செயலாளர் ஜீவானந்தம்,சூர்யா செந்தில்,முன்னாள் கவுன்சிலர் ஆண்டிபாளையம் ஆனந்தன்,மாவட்ட மகளிரணி செயலாளர் சுந்தராம்பாள் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Similar News