ரத்தன் டா டா வின் மறைவுக்கு திருச்செங்கோட்டில் அஞ்சலி

ரத்தன் டா டா வின் மறைவுக்கு திருச்செங்கோட்டில் அஞ்சலி

Update: 2024-10-10 08:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்கள் ஒன்றான tata நிறுவனங்களின் தலைவர் ரத்தன் டாடா உடல்நல குறை காரணமாக மறைவடைந்ததை ஒட்டி நாடு முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் சார்பில் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே ரத்தன் டாட்டாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, நகர் மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி உலகநாதன், திவ்யா வெங்கடேஸ்வரன், சண்முக வடிவு, செல்வி ராஜவேல், தாமரைச்செல்வி மணிகண்டன், சினேகா ஹரிகரன், ராஜா, மல்லிகா, ராஜவேல், கார்த்திகேயன், முருகேசன், தினேஷ்குமார், அசோக் குமார், மனோன்மணி சரவண முருகன், செல்லம்மாள் தேவராஜன், தினசரி மார்க்கெட் வியாபாரிகள்சங்கதலைவர் ஆட்டோ ஓட்டுநர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு ரத்தன் டாடாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Similar News