விஜயதசமியை முன்னிட்டு ட்ரினிட்டி பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை.

விஜயதசமியை முன்னிட்டு நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள ட்ரினிட்டி அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை இன்று நடைபெற்றது.

Update: 2024-10-12 09:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நவராத்திரி விழாவின் நிறைவு நாளான இன்று விஜயதசமி முன்னிட்டு வித்யா ஆரம்பம் நடைபெற்றது நவராத்தியின் 9 நாட்கள் நிறைவடைந்து 10வது நாளில் வருவது விஜயதசமி திருநாளும் இது அம்பிகை அசுரனை வெற்றி கொண்ட நாளாகும் இந்த நாளில் தொழில்கள் சிறக்க நிறுவனங்கள் பூஜை செய்தும் குழந்தைகளின் கல்வி சிறக்க முதலில் எழுத பழக்கும் நிகழ்வான நித்யா ஆரம்பம் செய்து வைப்பதும் வழக்கம் அதன்படி இன்று நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள டிரினிட்டி அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமி சேர்க்கை வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது குழந்தைகளின் கைவிரலை பிடித்து தாம்பாளத்தில் பரப்பிய அரிசி அச்சாரத்தில் அ,ஆ என எழுதி அவர்களின் எழுத்தறிவை வளர்க்கும் விதமான வித்தியாச ஆரம்பம் நடைபெற்றது இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து ட்ரினிட்டி அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளை சேர்த்து விட்டனர்.

Similar News