மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய கனத்த மழை பெய்து வந்ததன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நின்று விடுமுறை;
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று விடியற்காலை 4.30, மணி வரை பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை விடியற்காலையில் மழை நின்றுள்ளது. இன்று காலை 4.30 மணி வரை பெய்த மழை அளவு மயிலாடுதுறை 22.50செ.மீ. மணல்மேடு 16.10 செ.மீ. சீர்காழி 9.68செ.மீ. கொள்ளிடம் 8.44 செ.மீ. தரங்கம்பாடி 13.43 செ.மீ. செம்பனார் கோவில் 18.24 செ.மீ.