அரியலூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

அரியலூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-01-18 15:01 GMT
அரியலூர், ஜன.18: அரியலூரிலுள்ள அதிமுக மாவட்ட ஆலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசினார். அமைப்புச் செயலர் ஆசைமணி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை விழா பொது கூட்டங்கள் நடத்துவது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை அனைத்து கிளைகளிலும் சிறப்பாக கொண்டாடுவது, அனைத்து கிளைகளிலும் பூத் கமிட்டி அமைப்பது, கட்சியில் விளையாட்டுப் பிரிவு தொடங்குவது, இனி வரும் தேர்தல்களில் திமுக ஆட்சியின் மக்கள் விரோத திட்டங்கள் குறித்து மக்களிடையே கொண்டுச் செல்லவது, கருத்து வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையாக இருந்து தீவிரமாக களப்பணியாற்று என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம், மாவட்ட பொருளாளர் அன்பழகன், அண்ணா தொழிற் சங்க மாவட்டச் செயலர் கல்லங்குறிச்சி பாஸ்கர், மாவட்ட அம்மா பேரவை செயலர் ஓ.பி.சங்கர், இணைச் செயலர் நா.பிரேம்குமார், மாவட்ட மகளிரணிச் செயலர் ஜீவாஅரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :

Similar News