உப்பாறு பாசன விவசாயிகள் அணையில் இருந்து தண்ணீர் திறக்க எதிர்ப்பு
உப்பாறு பாசன விவசாயிகள் அணையில் இருந்து தண்ணீர் திறக்க எதிர்ப்பு;
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது உப்பாறு அணை. 24-அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை கடந்த 5, ஆண்டுகளாக போதிய அளவில் தண்ணீா் இல்லாமல் பெரும்பாலான நேரங்களில் வடே இருந்தது. இதனிடையே, உப்பாறு பகுதி விவசாயிகள் நடத்திய தொடா் போராட்டம் காரணமாக திருமூா்த்தி அணையில் இருந்து இந் அணைக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால் தற்பொழுது-12 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் இன்று நீர்வளத் துறை மூலம் முதலமைச்சரின் உத்தரவின் பேரிலும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் உப்பாறு அணையில் உள்ள இடது, வலது, கால்வாயில் தண்ணீர் திறந்து விட அறிவுறுத்தப்பட்டிருந்தது இந்த நிலையில் விவசாயிகள் அணையின் கீழ்பகுதியில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் தற்பொழுது தண்ணீர் திறக்க வேண்டாம் என கோரி அணை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தாசில்தார் திரவியம் மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விவசாயிகளின் குறைகளை எடுத்துக் கூறியும் அதன் பிறகு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு பிப்ரவரி-3ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் உப்பாறு அணையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயி குணசேகரன் தெரிவிக்கையில்:- அணையில் உள்ள 12- அடி தண்ணீர் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும். வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் தண்ணீர் திறந்து விட்டால் ஆலாம்பாளையம், தொப்பம்பட்டி, சின்னிய கவுண்டம்பாளையம், நஞ்சியம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படும் இதனால் தண்ணீர் திறந்து விட்டும் கடைமடை விவசாயிகள் பயன்பெற மாட்டார்கள். ஆதலால் உப்பாறு அணைப்பகுதியில் கீழ் உள்ள உள்ள வாய்க்கால்களை தூர்வாரி விட்டு அதன் பிறகு பிப்ரவரி-3,ஆம் தேதி அன்று தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதனை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது அதனால் தற்காலிகமாக நாங்கள் போராட்டத்தை கைவிட்டு உள்ளோம் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.