தற்கொலை செய்யும் முன் தனது இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வீடியோ பதிவு செய்ததால் பரபரப்பு..

தற்கொலை செய்யும் முன் தனது இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வீடியோ பதிவு செய்ததால் பரபரப்பு..;

Update: 2025-01-21 12:20 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கந்துவட்டி கொடுமையால் வாலிபர் விஷம் குடித்து, தூக்கிட்டு தற்கொலை.. தற்கொலை செய்யும் முன் தனது இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வீடியோ பதிவு செய்ததால் பரபரப்பு.. திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த அய்யனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் இன்னும் திருமணம் ஆக நிலையில் இவர் பல்வேறு இடங்களில் கடன் பெற்று பல தொழில்களை செய்து வந்துள்ளார், இந்நிலையில் தொழில்களில் நஷ்டம் ஏற்படவே, குடியாத்தம் பகுதியை சேர்ந்த நபரிடமும், விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த பெண்ணிடம்,மற்றும் கோவையை சேர்ந்த நபர் என 3 பேரிடம் 20 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது, இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள், கடனை திருப்பி கேட்டு தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்ததாகவும், மேலும் கடன் கொடுத்தவர்கள் தன்னை அடித்து துன்புறுத்தி அதிக மன உளைச்சலுக்கு உண்டாக்கியதாகவும், மேலும் கடன் தொகையை முழுவதும் அளித்து விட்டும் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் செல்வகுமார், அதிக மன உளைச்சலில், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.. மேலும் தனது இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், தனது இறப்பிற்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்கமாக தனது குடும்பத்தினருக்காக செல்போன் மூலம் வீடியோ, மற்றும் கடிதம் எழுது வைத்து விட்டு, தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து, செல்வகுமார் கடைசியாக பேசிய வீடியோ மற்றும், கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. அதனை தொடர்ந்து செல்வகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், செல்வகுமாரின் இறப்பிற்கு முக்கிய காரணமாக விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த லட்சுமி மற்றும் அவரது மகன்கள் தினேஷ் மற்றும் செல்வா ஆகியோரை உடனடியாக கைது செய்யக்கோரியும், அதுவரையில் செல்வகுமாரின் உடலை வாங்கமாட்டோம் என செல்வகுமாரின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நிலையில், ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார் தலைமையிலான காவல்துறையினர் செல்வகுமாரின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு, தினேஷ் என்பவரை கைது செய்துள்ளதாக தெரிவித்தையடுத்து, செல்வகுமாரின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.. மேலும் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் விஷம் குடித்தும், தூக்கிட்டும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது..

Similar News