அரகண்டநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணம்!

மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணம்!;

Update: 2025-01-28 01:01 GMT
கண்டாச்சிபுரம் வட்டம், வீரசோழபுரம் காலனி தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் கணபதி (56). விவசாயியான இவா், சனிக்கிழமை தனது விவசாய நிலத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்குள்ள மரத்தின் மீது ஏறி கிளைகளை அகற்றிய போது மேலே தொங்கிக் கொண்டிருந்த உயா் அழுத்த மின் கம்பியில் கை பட்டதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு முகையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு, மருத்துவா் பரிசோதித்ததில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில், அரகண்டநல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Similar News