புதிதாக வாங்கப்பட்ட அரசுப்பேருந்து பழுது - பேருந்து ஸ்டார்ட் ஆகாததால் பேருந்தை தள்ளிவிட்ட பயணிகள்

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே அரசு பேருந்து பழுதானதால் போக்குவரத்து வரத்து பாதிப்பு ஏற்பட்டது;

Update: 2025-01-28 12:44 GMT
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து முசிறி, தொட்டியம், நாமக்கல் வழியாக சேலம் செல்லும் அரசு பேருந்து திருச்சி தலைமை தபால் நிலையம் ரவுண்டானா பகுதியில் சிக்னலுக்காக காத்திருந்தது. அப்போது அரசு பேருந்து நின்றபோது, மீண்டும் அரசு பேருந்து ஸ்டார்ட் ஆகாததால் பேருந்தில் பயணித்த பயணிகள் அதிருப்தி அடைந்தனர் . பின்னர் அவர்கள் இறங்கி பேருந்தை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்து, பின்னர் ஏறிசென்று மீண்டும் பயணிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. அரசு பேருந்து பழுதாகியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Similar News