கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்: கோழி வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு
கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்: கோழி வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு எடுக்கப்பட்டுள்ளது.;
அரியலூர், பிப்.5- அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பிப்.14 ஆம் தேதி வரை நடைபெறும் கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை, கோழி வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்தது: கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி இரு வார சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு 1.2.2025 முதல் 14.2.2025 வரை இருவாரங்கள் கோழிகளுக்கான “கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி சிறப்பு முகாம் அனைத்து கிராமங்களிலும் நடைபெறுகிறது.இம்முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அனைத்து கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன்பெறலாம்.