விழப்பள்ளம்: அம்மன் திருத்தேரில் சுவாமி வீதியுலா
விழப்பள்ளம் அம்மன் திருத்தேரில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது.;
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஏழை மாரியம்மன் திருக்கோயில் என வழங்கும் அருள்மிகு செங்கழணி மாரியம்மன் திருக்கோயிலில் தை மாத பௌர்ணமி முன்னிட்டு இன்று அம்மன் திருத்தேரில் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.