சிறப்பு எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்

மாற்றம்;

Update: 2025-02-13 03:31 GMT
கள்ளக்குறிச்சி அருகே வடபொன்பரப்பி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் சண்முகம். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இடப்பிரச்னை தொடர்பான விசாரணைக்காக புதுப்பட்டு கிராமத்திற்கு சென்றார். அங்கு, பெண் ஒருவரை அநாகரிகமாக திட்டியதாக புகார் எழுந்தது.இது குறித்த விசாரணையை தொடர்ந்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகத்தை ஆயுதப்படைக்கு மாற்றி கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார்.

Similar News