கச்சிராயபாளையம் அடுத்த நல்லாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது கூரை வீடு, தீப்பிடித்து எரிந்ததில் வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமானது.இவரது குடும்பத்திற்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ., நேரில் ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அய்யம்பெருமாள், ராஜேந்திரன், ஜெ., பேரவை செயலாளர் ராமதாஸ், கிளை செயலாளர்கள் ஞானமூர்த்தி, மாரியாப்பிள்ளை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.