நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ளது அச்சம் தீர்த்த விநாயகர் திருக்கோயில். விநாயகருக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யபட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.