விராலிமலை, மனமேட்டுப்பட்டியை சேர்ந்த பெரியாக்கள் (35) என்பவர் விராலிமலையில் உள்ள அருள்ஜோதி மஹால் அருகே சாலையில் நடந்து சென்ற போது அவரின் பின்புறம் பைக்கில் வந்த மாரிகண்ணு (29) மோதியதில் அவருக்கு காயம் ஏற்பட்டு மணப்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விராலிமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.