திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் சுகபுத்ரா உத்தரவின்படி இன்று திருநெல்வேலி மற்றும் தச்சநல்லூர் பகுதியில் நீண்ட காலமாக சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத 8 குடியிருப்பு கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.