வில்வித்தை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தனி பிரிவு காவலரின் மகள் சாதனை

சென்னையில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தனி பிரிவு காவலரின் மகள் சாதனை;

Update: 2025-03-01 15:03 GMT
தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற18 வது மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் 13 வயதுக்குட்பட்டோருக்கான (Recurve Bow) பிரிவில் கலந்து எப்படை காவல் நிலைய தனி பிரிவு காவலர் பிரவீன் குமார் மற்றும் குமாரபாளையம் நெடுஞ்சாலை போக்குவரத்து காவலர் வனிதா ஆகியோரின் மகள் p.லியாஸ்ரீ வெற்றி பெற்று வெள்ளி பதக்கம் பெற்றதுடன் அடுத்த மாதம் மார்ச் 20 -3-25 To 29-3-25 ம் தேதி வரை ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே குண்டூர் ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் இந்திய வில்வித்தை சங்கத்தின் சார்பில் நடைபெற உள்ள தேசிய அளவிளான வில்வித்தைப் போட்டியில் பங்குபெற தேர்வாகி அவர் படித்து வரும் வாணி வித்யாலாய மெட்ரிகுலேஷன் பள்ளிக்கும் நாமக்கல் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்

Similar News