செஞ்சி அருகே பணத்துடன் பெண் மாயம் போலீஸார் விசாரணை
கணவர் காவல் நிலையத்தில் புகார்;
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அடுத்த முருகன்தாங்கலை சேர்ந்தவர்ச் பாண்டிதுரை மனைவி அபி, 20; இவர், கடந்த 24ம் தேதி இரவு 8:00 மணி முதல் காணவில்லை.இதுகுறித்து பாண்டிதுரை, தனது தங்கை சீமந்தத்திற்காக, வீட்டில் வைத்திருந்த 3 லட்சம் ரூபாயுடன் மனைவி அபியைக் காணவில்லை என அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.