காளியம்மன், மாரியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு   நடந்தது.;

Update: 2025-03-03 14:20 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில் மகா குண்டம், தேர்த்திருவிழாவையொட்டி பிப். 18ல்  பூச்சாட்டுதல் விழா, பிப். 25  மறு பூச்சாட்டு விழா நடந்தது.  பிப். 26ல் கொடியேற்றம், மார்ச் 4ல் தேர்கலசம் வைத்தல், அதே நாள் இரவு காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல், மார்ச் 5ல் மகா குண்டம், பூ மிதித்தல், மார்ச் 6ல் அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, மார்ச் 7ல் தேர் நிலை நிறுத்துதல், வாண வேடிக்கை, அம்மன் திருவீதி உலா, மார்ச் 8ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, மார்ச் 9ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா ஆகியன நடைபெறவுள்ளது.  குமாரபாளையம் நகரில் உள்ள தேவாங்கர் மாரியம்மன் கோவில், 24மனை மாரியம்மன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன், வாசுகி நகர்  சக்தி மாரியம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோவில்களில் பிப். 25  பூச்சாட்டு விழா நடந்தது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள், கம்பங்கள்  ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. தினசரி அனைத்து கோவில்களில் சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடந்து வருகிறது. அனைத்து மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடப்பட்டுள்ளன. இந்த கம்பத்திற்கு அந்தந்த பகுதி பக்தர்கள், தண்ணீர் ஊற்றி, மஞ்சள், குங்குமம் வைத்தும், மலர்மாலைகள் அணிவித்தும்  தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டி வருகிறார்கள். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News