மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்
குறைதீர்க்கும் முகாம்;
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 5) பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் 14 பேர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவலர்களுக்கு காவல் ஆணையாளர் உத்தரவிட்டார்.