தனியார் நிதி நிறுவனம் சார்பில் போக்குவரத்து போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

குமாரபாளையம் தனியார் நிதி நிறுவனம் சார்பில் போக்குவரத்து போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.;

Update: 2025-03-05 09:58 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கிரெடிட் அசெஸ் கிராமீன் கூட்டா லிமிடெட் , நிதி நிறுவனம் சார்பில், குமாரபாளையம் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் நடந்தது. இதில் இரும்பு தடுப்புகள் 10, ஒளிரும் ஜாக்கெட் 20, ஒளிரும் எச்சரிக்கை டார்ச் லைட் 10 ஆகியவைகளை மண்டல மேலாளர் மைதீன் வழங்க, இன்ஸ்பெக்டர் முருகேசன் பெற்றுகொண்டார். இதில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.

Similar News