வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு பூஜை!
முருகர் கோயிலில் மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு இன்று வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அடுத்த புதுவசூர் தீர்த்தகிரி மலையில் உள்ள முருகர் கோயிலில் மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு இன்று வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.