கேக் கடையில் ரகளை ஈடுபட்ட அதிமுக பிரமுகர்

கேக் வேர்ல்ட் ஷாப் கேக் கடையில் கடந்த மாதம் வாங்கிய கேக்கிர்க்கு பணம் தராத நிலையில் இந்த மாதமும் வந்து கேக் கேட்டு கடைக்குள் புகுந்து அதிமுக பிரமுகரும் வழக்கறிஞருமான ரஜேஷ் உட்பட ஐந்து பேர் பொருட்களை அடித்து உடைத்து ரகளை கடை உரிமையாளர் உமாகாந்த் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார்;

Update: 2025-03-06 14:06 GMT
காக்களூர் சிக்னல் பகுதியில் தி கேக் வேர்ல்ட் ஷாப் கேக் கடையில் கடந்த மாதம் வாங்கிய கேக்கிர்க்கு பணம் தராத நிலையில் இந்த மாதமும் வந்து கேக் கேட்டு கடைக்குள் புகுந்து அதிமுக பிரமுகரும் வழக்கறிஞருமான ரஜேஷ் உட்பட ஐந்து பேர் பொருட்களை அடித்து உடைத்து ரகளை கடை உரிமையாளர் உமாகாந்த் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் ஆவடி பைபாஸ் கூட்டுச்சாலை பகுதியில் கேக் வேர்ல்ட் கடை கடந்த நான்கு ஆண்டுகளாக உமா காந்த் என்பவர் நடத்தி வருகிறார், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சேலை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரும் அதிமுக பிரமுகர்மான ராஜேஷ் என்பவர் வேர்ல்ட் கடையில் கேக் வாங்கிக்கொண்டு கூகுள் பே மூலம் அனுப்புவதாக தெரிவித்து கூகுள் பே சரியாக வேலை செய்யவில்லை வீட்டுக்கு சென்று பின்னர் அனுப்புவதாக கூறிச் சென்ற நிலையில் பணம் தரவில்லை என கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று மீண்டும் திருவள்ளூர் ஆவடி பைபாஸ் கூட்டுச்சாலையில் உள்ள cake world கடையில் கேட்க கேட்டு உரிமையாளர் உமாகாந்தை மிரட்டியதாகவும் ஆனால் பணம் கொடுக்காமல் கேக் தர முடியாது என உரிமையாளர் உமாகாந்த் கூறிய நிலையில் நான்குக்கும் மேற்பட்ட நபர்களுடன் கடைக்கு வந்து கடையில் இருந்த உரிமையாளர் உமாகாந்த் மற்றும் அவரது நண்பர் கடையில் பணிபுரியில் பெண் ஆகியோரை கேக் கேட்டு மிரட்டியதுடன் கடையில் இருந்த கம்ப்யூட்டர் கண்ணாடி பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் கல்லாப்பெட்டியையும் அடித்து நொறுக்கி உள்ளனர் மேலும் கடையில் இருந்தவர்களை அடித்ததுடன் இனிவரும் காலங்களில் நான் கேட்கும் போது இலவசமாக கேக் கொடுக்கவில்லை என்றால் இந்த இடத்தில் கடை நடத்த முடியாது உன்னை கொன்று விடுவேன் என கூறி மிரட்டி சென்றதாகவும் கூறப்படும் நிலையில் கடையை அடித்து நொறுக்கிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சம்பவம் குறித்து கேக் வெல்டு கடையின் உரிமையாளர் உமாகாந்த் திருவள்ளூர் நகர காவல் துறையில் புகார் அளித்துள்ள நிலையில் புகார் குறித்து இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் உடனடியாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடையில் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்

Similar News