அரக்கோணம்:மின்வாரிய அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்!

மின்வாரிய அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்!;

Update: 2025-03-07 14:34 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று மின்வாரிய ஊழியர்கள் மகளிர் தின விழா கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு டவுன் உதவி செயற்பொறியாளர் புனிதா தலைமை வகித்தார். இதில் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் மகளிர் தின விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தினர். மேலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண் மின்வாரிய ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Similar News