அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா,
குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா, தலைமையில் கொண்டாடப்பட்டது;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா, முதல்வர், .ரேணுகா தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் . தொழில் முனைவோர் பிரேமலதா பங்கேற்று வாழ்த்தி பேசினார். மாணவிகளுக்கு பெண்களின் கல்வியறிவு, முன்னேற்றம், பொருளாதார சுதந்திரம் மற்றும் வாழ்வியல் வெற்றி முறை பற்றி எடுத்துரைத்தார். அனைத்து பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். இவ்விழாவினை மகளிர் மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி மற்றும் உறுப்பினர் உடற்கல்வி இயக்குனர் பிரியா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.