குமாரபாளையம் கவுன்சிலருக்கு விருது

குமாரபாளையம் கவுன்சிலருக்கு தனியார் தொலைக்காட்சி சார்பில் விருது வழங்கப்பட்டது;

Update: 2025-03-14 14:11 GMT
ஈரோடு மாவட்டம் சித்தோடு அம்மன் கலை அறிவியல் கல்லூரியில் தனியார்  தொலைக்காட்சி நடத்திய மகளிர் தின விழாவில்,   குமாரபாளையம் 28வது வார்டை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் அம்பிகா ராதாகிருஷ்ணன் குமாரபாளையம் பகுதியில்  சிறந்த கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களில் சிறந்த முன்னெடுப்பு மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகளை சரிப்படுத்துதல்,  அரசு சார்ந்த நலத்திட்டங்கள் மக்களுக்கு பெற்றுத் தர எடுத்த முயற்சிகள் காரணமாக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. அம்பிகாவை நகராட்சி தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் பாராட்டினார்கள்.

Similar News