காவிரி நதிக்கு சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் நகர் பகுதியில் காவிரி நதிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு நதிக்கு தீபம் ஏற்றி தீப வழிபாடு நடப்பட்டது.;

Update: 2025-03-14 14:14 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சின்னப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் காவிரி நதிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு நதிக்கு தீபம் ஏற்றி தீப வழிபாடு நடப்பட்டது. இதில்  துறவிகள் பேரவை சார்பில் ராமானந்த சுவாமி. பங்கேற்று,  காவிரி அன்னைக்கு ஆரத்தி செய்தார்.  இதனை நிர்வாகி  சீனிவாசன் ஏற்பாடு செய்தார். தொடர்ந்து காவிரி ஆரத்தியானது குமாரபாளையம் காவேரி நதிக்கரையில் நடைபெற்று வருகிறது இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக   அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறுப்பாளர் சபரிநாதன், ஈரோடு பொறுப்பாளர்கள் ஆடிட்டர் கஸ்தூரி ரங்கன்,  அஸ்வத்,   குமாரபாளையம் பொறுப்பாளர் சீனிவாசன் ,   வேணுகோபால், ராஜ் ,. சுகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர். நதிநீரின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துரைத்து நதிநீரை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் இவ்வாறெல்லாம் நாம் நதி நீரை பாதுகாக்க, இந்த  காலகட்டத்தில் முன்வர வேண்டும் என்று மக்களிடையே ராமானந்த சுவாமி எடுத்துரைத்தார்.

Similar News