நீர் நிலைகளை பாதுகாக்க பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரம்
நீர் நிலைகளை பாதுகாக்க கைகளில் பதாகைகளை ஏந்தி பசுமைத்தாயகம் அமைப்பினர் விழிப்புணர்வு பிரச்சாரம்;
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் நீர் நிலைகளை பாதுகாக்க கைகளில் பதாகைகளை ஏந்தி பசுமைத்தாயகம் அமைப்பினர் விழிப்புணர்வு பிரச்சாரம். கும்முடிபூண்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் ஏரியை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி பசுமை தாயகம் அமைப்பு சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் VM பிரகாஷ் தலைமையில் சுமார் 60 ஏக்கர் தாமரை ஏரியை ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரி பாதுகாக்க வலியுறுத்தி 2017 சட்டபடி சதுப்பு நிலை ஆணையம் சட்டப்படி நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளபடி நீர் நிலைகளை வேறு பயன்பாட்டிற்கு மாற்றக்கூடாது என்பதும் நில அளவை செய்து அவைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழக முழுவதும் வருகின்ற 22 உலக தண்ணீர் தினத்தன்று கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் அவர்களிடம் மழை வெள்ள காலங்களில் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் வெள்ளநீர் சாக்கடை கழிவுநீர் சூழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு அளித்தனர். இன்று முதல் அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை அந்தந்த கிராமங்களில் உள்ள பசுமை தாயகம் அமைப்பாளர்களும் தன்னார்வலர் தொண்டு உறுப்பினர்களும் மேற்கொள்வார்கள் என்றும் வி எம் பிரகாஷ் தெரிவித்தார்